பெண் எனப்படுபவள்

மாறித்தான் போகும்
ஒவ்வொருவர்
கை மணமும்
கலந்துள்ள
வியர்வையின் வாசம்
வித்தியாசப்படுவதால்

பெண் எனப்படுபவள்

தாய்மை
அடைதல் என்பது
உடல் தகுதி
பெண் என்ற பிறப்பே
முதல் தகுதி
மனத்தகுதி
முழுத்தகுதி

பெண் எனப்படுபவள்

காதலை கவிதையாக
காதலை சுவாசமாக
காதலை காமமாக
காதலை குற்றமாக
காதலை வெறும் காரணமாக
காதலை இயல்பான காதலாக
நிர்ணயிக்கிறது
காதலியாகும்
பெண்னின் குணம்

பெண் எனப்படுபவள்

பெண்மையின்
சிவந்த வெட்கம்
மலர்ந்த புன்னகை
நிமிர்ந்த அறிவு
அடர்ந்த அன்பு…
உலகை
புதிப்பிப்பதற்கான
இன்னொரு வாய்ப்பு
பெண் எனப்படுபவள்

ஆழ்கடல்
மனமென்றும்
அறியமுடியாதென்றும்
காரணங்கள்
சொல்லித்தவிர்க்கும்
கதைகள் பல இங்கே
விருப்பங்களும்
விளக்கங்களும்
வெளிப்படையாய்
விரிந்துகிடக்கும்
எப்போதும்
பெண்களின்
கண்களில்

பெண் எனப்படுபவள்

தனித்தனி
பூக்களாய்
படைத்து படைத்து
சலித்துப்போய்தான்
மொத்தமாய்
படைத்துவிட்டான்
கொத்து கொத்தாய்
பெண்களென்று..

பெண் எனப்படுபவள்
வெடித்துச்சிதறும்பிழம்பாக
வெண்ணிலவின்
குளிராக
சிரிப்பாக
சிணுங்களாக
பயமாக
பரிதவிப்பாக
வித வித
ஒலிச்சிதறல்கள்
பிரபஞ்சமெங்கும்
பெண்களால்
காற்றைப்போல
காற்றைவிடவும்
காற்று இல்லாமலும்
ஒவ்வொருவர்
சுவாசத்திலும்
2 பின்னூட்டங்கள் நவம்பர்
20, 2009

பெண் எனப்படுபவள்

இதய பாரம் இறக்கி
இடுப்புபாரம் ஏற்றும்
ஒய்யார ஊர்வலம்
காதல்களும்
கவலைகளும்
கலந்து
கரைந்து போகும்
வற்றாத நீர்வளம்
பட்டது பெரு வலி
என பதைத்த நெஞ்சம்
நடந்த நிகழ்வுகள்
சொல்கையில்
நகைச்சுவையாகிப்போகும்
நாணமில்லாமல்
கண்ணுக்குள் விழுந்த காதல்
கண்டெடுப்பாள் ஒருத்தி
கண்ணீரில் விழுந்த காதால்
கரையச்செய்வாள் ஒருத்தி
கொட்டியது
வெறுங்குடங்கள்
அவரவர்
குடங்கள்
தூக்கியபோது
கை மாறும்
ஆறுதல் குடங்கள்

பெண் எனப்படுபவள்

கண்களில்
கவிழ்ந்திடும்
காந்தத்தில் ஓர் அழகு
கார்குழல்
ஒதுக்கி முடிந்ததில்
ஓர் அழகு
மெல்லிய சிரிப்பொளி
இதழ் கசிந்ததில்
ஓர் அழகு
கொள்ளென கை கொட்டி
சிரிப்பதை விட
ஏதழகு
ஊடலும் கூடலும்
ஓடலும் ஆடலும்
பாடலும் தேடலும்
ஒருங்கே
ஒளித்துவைத்து
உயர்வினி இல்லையென
உள்ளதெல்லாம் கொட்டிவைத்த
பெண் என்ற படைப்பே
பிரபஞ்சத்தின் பேரழகு
பெண் எனப்படுபவள்
அவனுக்குநினைவு குறிப்பேடு
நிகழ்வுகளின் அலாரம்
அவள்..
எழுந்துருங்கள்
நேரமாகிவிட்டது முதல்
உறங்குங்கள்
நேரமாகிவிட்டது வரை
குறிப்பேடின்
அடிக்கோடிட்ட
அடுத்தடுத்த வரியாய்
“சொல்ல மாட்டியா..” என்பது
முதல் ஞாபகப்படுத்தல்
பதியாத போது
இரண்டவது முறையோ
மூண்றாவது முறையோ
சொல்ல நேர்ந்தால்
அடிக்கொடிட்ட
அந்த வார்த்தை
தவறாது சொல்லப்படுமென
அர்த்தம்
பல நாள் கவனிப்பில்
ஒரு நாள் கேட்டேன்
உனக்கு எதற்காவது
அலாரமாகி இருக்கிறாரா..என்று
அமைதியாய்
அடர்த்தியாய்
ஆழமாய் பார்த்து
வெகு இயல்பாய்
சொல்லிப்போனால்
வெளிக்கிளம்பும்
எல்லா தருணத்திலும்
“இடுப்புச்சேலையை
இழு
எல்லா தருணத்திலும்
“இடுப்புச்சேலையை
இழு

பெண் எனப்படுபவள்..

வந்த பாதை
வலி என்றபோதும்
வாழ்ந்த வாழ்க்கை
துயர் என்ற போதும்
தயங்காமல்
தள்ளுகிறாள் அதில்
தாய் என்ற
ஒரே காரணத்தால்

பெண் எனப்படுபவள்….

எதற்க்கும்
இருக்கட்டும்
என்று
எடுத்துவைத்த
வைராக்கியங்கள்
இழுத்து நிறுத்துகிறது
இயலாமையிலும்
போராளிகளாய்

பெண் எனப்படுபவள்

தலையில்
வைப்பது
நெருப்பென்று
அறியாமல்
புகழ்தலில்
உருகி உருகித்தான்
மெழுகாய்
ஒளி வீசுகிறார்கள்
பெண்கள்

பெண் எனப்படுபவள்..
சண்டை வலுத்த நேரங்களின்
வார்த்தை தெரித்த தடயங்களை
காதுகள் நிறைந்த
வீட்டுச்சுவற்றை
வருடத்திற்க்கொரு முறை
பூசிமறைக்கிறாள்
மறைத்தும் மறைந்திடாத
மனத்தழும்புகளுடன்

பெண் எனப்படுபவள்..

அடைத்த பாத்திரத்தில்
அடைந்த பாத்திரத்தில்
அதன் வடிவில் சமைந்து
ஓடையாய் நதியாய்
அருவியாய் கடலாய்..
கோபத்தில் வெறுத்து
மேகமாய் தனித்து
மன நிலை இழக
மழையாய் பொழிந்து..
பேசாமல் வைத்திருக்கலாம்
பெண்ணிற்க்கு
நீர் என்ற பெயரை.

பெண் எனப்படுபவள்…

கண்ணாடி முன்
பெண்கள் எனில்
எழிலை ரசிப்பதாய்
எத்தனையோ பேர்
நினைக்கக்கூடும்
ஆழமாய் ஊடுருவி
தேடுவதெல்லாம்
நேசிக்கப்பட்ட அழகுகளை
மட்டுமல்ல
நிராகரிக்கப்பட்ட
கனவுகளையும் தான்

பெண் எனப்படுபவள்..

உற்றவர் தோழியர்
பேசித்தீர்த்த ஒரு கணத்தில்
பிள்ளைகள் பள்ளி செல்ல
படவிக்கிடக்கும்
மதியப்பொழுதில்
புணர்தலில் களைத்தவன்
உறங்கிப்போன
பின்னிரவில்
நிகழ்வுகளின்
எச்சமென
வாழ்தலின்
மிச்சமென
தவிர்த்தலின்றி
தனிமைப்பொழுதுகள்
பெண்கள்
வாழ்வில்

பெண் எனப்படுபவள்..

மரணப்படுக்கையில்
குடும்பத்தலைவி
இறந்துகொண்டிருக்கிறது
வீடு..

பெண் எனப்படுபவள்

பேரிரைச்சல்
கொண்ட உலகையும்
பெருமெளனம்
கொண்ட வாழ்வையும்
ஒற்றைசங்கீதமாய்
இனைக்கிறது
எவ்வடிவிலாவது வரும்
ஓர் பெண் உறவு
.
No comments:
Post a Comment